முதல்வர் அணியினர் ஓபிஎஸ் அணியை ஒதுக்குவதாக மைத்ரேயன் மீண்டும் குற்றச்சாட்டியுள்ளார்.
மைத்ரேயன் நேற்று தனது முகநூல் பக்கத்தில், "ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. ஆனால் மனங்கள் இணையவில்லை என முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று மீண்டும் முதல்வர் அணியினர் ஓபிஎஸ் அணியை ஓதுக்குவதாக மைத்ரேயன் குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில் ஓபிஎஸ் அணி என்று தங்களை ஒதுக்க வேண்டாம் என்றும் அதிமுக மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்களை அரவணைத்து சென்றால் நன்றாக இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.