சசிகலா பரோல் விடுப்பு கோரி மீண்டும் மனு தாக்கல்

சசிகலா பரோல் விடுப்பு கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். சசிகலா பரோலுக்கு தேவையான ஆவணங்களை
சசிகலா பரோல் விடுப்பு கோரி மீண்டும் மனு தாக்கல்

சசிகலா பரோல் விடுப்பு கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். சசிகலா பரோலுக்கு தேவையான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள சசிகலா, தனது கணவர் நடராஜனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை பார்த்து வருவதற்காக 15 நாள்கள் பரோலில் அனுப்புமாறு மனு அளித்திருந்தார்.

இதையடுத்து சசிகலாவுக்கு பரோல் வழங்கினால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடியுமா என கேட்டு கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஜிபி என்.எஸ்.மெஜ்ரிக், சென்னை காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கிடையில் நேற்று சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக செய்தி வெளியானது. பரோல் பெறுவதற்கு சமர்ப்பித்த ஆவணங்கள் முறையாக இல்லாததால் மனுதள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று சசிகலா பரோல் விடுப்பு கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். சசிகலா பரோலுக்கு தேவையான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com