ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் நள்ளிரவு முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
பஞ்ச் மாவட்டத்தில் உள்ள திக்வார் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்போ, பொருளிலப்போ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
நள்ளிரவு முதல் இருதரப்பினருக்கிடையே தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.