லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடி பேச்சு

ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடி பேச்சு

ஹைதராபாத்: ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தின் தொழிலாளர் சங்க தேர்தலில் டிஆர்எஸ் கட்சி சார்பிலான சங்கம் வெற்றி பெற்றது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டிஆர்எஸ் கட்சி தலைவரும் மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ் கலந்துகொண்டார்.

உயர் அதிகாரிகள் குறித்து தொழிலாளர்கள் பல்வேறு குறைகளை கூறினார்கள். நிறுவனத்தின் மெடிக்கல் போர்டில் ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் பல்லாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டினர். நிறுவனத்தின் குடியிருப்பில் இடம் வேண்டும் என்றால் லஞ்சம் என பரவலாக ஊழல் இருப்பதாக கூறினார்.

இதையடுத்து பேசிய முதல்வர் சந்திரசேகர் ராவ், தெலங்கானா போகு கனி கர்மிகா சங்கத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மக்கள் தங்களுக்கான நலன்களை பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பது துரதிருஷ்டவசமானது என்றவர் இது நாள் வரை தொழிலாளர்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்தாதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

புதிய மாநிலம் என்பதால் பல்வேறு பிரச்னைகளை தினந்தோறும் சந்திக்க வேண்டியிருந்தது. அதனால் சிங்கரேணி தொழிலாளர் பிரச்னையில் கவனம் செலுத்தமுடியவில்லை என தொழிலாளர்களிடம் விளக்கம் அளித்தார். வட்டி இல்லாத இலவச வீட்டு கடன்கள் அனைத்து தகுதியுள்ள தொழிலாளர்கள் வழங்கப்படும் என்றார்.

லஞ்சம் கேட்கும் ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள் என்றும் லஞ்சத்தை ஊக்குவிக்க வேண்டாம் என குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஆவேசமாக பேசினார் சந்திரசேகர் ராவ். 

சிங்கரேணி தொழிற்சங்க உறுப்பினர்களின் மாத கட்டணம் தற்போது 20 முதல் 1 வரை குறைக்கப்படும். தொழிலாளர்களின் குடியிருப்புகளில் ஏசி வசதி குறைக்கப்படும் என்றும், அரசு ஊழியர்களின் குழந்தைகள் ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் இடம் பெற்றால், கல்வி செலவினங்களை அரசு செலவிடும்.  அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை சிங்கரேணி நிலக்கரி நிறுவன தொழிலாளர்களுக்கு விடுமுறை தினமாக அறிவிப்பதற்கும், ஊழியர்களின் பழைய குடியிருப்புகளை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தின் தொழிலாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், "விரைவில் சிங்கரேணி யாத்ராவை நடத்துகிறேன், அதில், நேரடியாக உங்கள் பிரச்னைகளைக் கண்டுபிடிப்பேன். சிங்கரேணி மருத்துவமனையில் எப்படி சிகிச்சையளிக்கப்படுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ள மருத்துவ சோதனைகளில் ஈடுபடுவேன் என்று தெரிவித்தார்.

முதல்வர் சந்திரசேகர ராவின் பேச்சு, அதிகாரிகளிடையே மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கி உள்ளது. கடந்த ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசுகையில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கொல்வேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com