கேரளாவில் நடத்தப்படும் ஜனரக்ஷா யாத்ராவில் அமித்ஷா பங்கேற்பு

கேரளாவில் நடத்தப்படும் ஜனரக்ஷா யாத்ராவில் அமித்ஷா பங்கேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைக்கு எதிராக கேரளாவில் நடத்தப்படும் ஜனரக்ஷா யாத்ராவில்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைக்கு எதிராக கேரளாவில் நடத்தப்படும் ஜனரக்ஷா யாத்ராவில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அவர் கட்சித் தொண்டர்களுடன் பட்டோம் பகுதியில் இருந்து புத்ரிகாண்டம் வரை நடைபயணம் மேற்கொள்கிறார்.

கடந்த அக்டோபர் 3ம் தேதி இந்த பாதயாத்திரையை கன்னூரில் அமித் ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆனால் பிரதமரின் அழைப்பால் தமது கேரள நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு அவசரமாக தில்லி திரும்பிய அவர் தற்போது மீண்டும் கேரளாவிற்கு சென்று பாதயாத்திரையில் பங்கேற்கிறார்.

இந்நிலையில் மாநிலத்தில் பதட்டத்தை உருவாக்க பா.ஜ.க  முயற்சிக்கிறது என்று சிபிஐ (எம்) குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com