ஆட்சியிலும், கட்சியிலும் யாருடைய தலையீடும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

யாருடைய தலையீடும் இல்லாமல் ஆட்சியும், கட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஆட்சியிலும், கட்சியிலும் யாருடைய தலையீடும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

சென்னை: யாருடைய தலையீடும் இல்லாமல் ஆட்சியும், கட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
 
தினகரனும், சசிகலாவும் விரைவில் தங்களுடன் இணைவர்கள் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசி வந்தநிலையில், நான்காவது நபர்களின்  பேச்சுக்கே இடம் இல்லை என்று தெரிவித்தார்.
 
தம்பிதுரை பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்கள் கூறியதாவது: ஆட்சியிலும், கட்சியிலும் யாருடைய தலையீடும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது.

அரசு சார்பில் டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இரட்டை இலை சின்னத்தை மீட்க கட்சி சார்பில் அனைத்து நடவடிக்கைகளும், முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com