தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காய்ச்சல் என்று தெரிந்தவுடன் அரசு மருத்துவமனையை அணுகுங்கள். நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் டெங்கு நோய் கண்டறியும் கருவியை கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் 15 நாட்களுக்குள் டெங்கு முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறினார்.