சென்னையில் தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட 26 பேருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதால் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பட்டாசு தீக் காயம் பட்டு 26 பேர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
26 பேரில் 17பேர் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை டீன் வனிதா மணி தெரிவித்துள்ளார். எனினும் கடந்தாண்டை விட இந்தாண்டு பட்டாசு விபத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.