சென்னை புதுப்பேட்டையில் பெருநகர காவலர்களுக்கான பல்பொருள் அங்காடியை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கார் முதல் அரிசி, பருப்பு வரையிலான அனைத்து விதமான பொருட்களும் இந்த அங்காடியில் கிடைக்கும் என ஏ.கே.விசுவநாதன் தெரிவித்தார்.
மேலும் சென்னை கொண்டித்தோப்பிலும் இதுபோல் அங்காடி திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.