வெங்கைய நாயுடு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

குடியரசுத் தலைவர் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு (68), சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததை அடுத்து நேற்று
வெங்கைய நாயுடு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

புதுதில்லி: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு (68), சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததை அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளித்து வரும் கார்டியலஜி துறை மூத்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சைக்காக வெங்கைய நாயுடு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட, அவருக்கு இதய அடைப்பைப் போக்கக்கூடிய நிலைப்பாடு பொருத்தப்பட்டு, தற்போது பூரண நலத்துடன் உள்ளார். இன்று சனிக்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வாய்ப்புள்ளதாகவும், அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும். கவலைப்பட ஒன்றும் இல்லை எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com