அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள், அழிந்து போவார்கள்; முதல்வர் பழனிசாமி
சென்னை தாம்பரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை யாராலும் அழிக்கவோ உடைக்கவோ முடியாது என்று கூறினார்.
மேலும் அவர் பேசும் போது பாஜக, காங்கிரஸ் என காலத்துக்கு தக்கவாறு அடிக்கடி அணிமாறுவது திமுகதான். திமுக ஆட்சிக் காலத்தில் கடுமையான மின்வெட்டுக்கு ஆளானது தமிழகம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா.
தமிழக திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம் என்று கூறினார். மேலும் உழைப்புக்கும், விசுவாசத்திற்கும் மதிப்பு கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுக. அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள், அழிந்து போவார்கள்.
96 எம்எல்ஏக்களுடன் மைனாரிட்டி அரசு நடத்திய திமுக எங்களது பெரும்பான்மையை பற்றி பேசுவதற்கு தகுதியில்லை என்றும், ஒருசொட்டு தண்ணீர் கூட வீணாக கூடாது என்பதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. தடுப்பணைகள் கட்டுவதற்காக ரூ. 1000 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.