மெர்சல் படத்தை ‘அடிரிந்தி’ (ADIRINDHI) என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்துள்ளனர். இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனை அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் ரிலீஸை அடுத்த வாரம் அக்டோபர் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மெர்சல் பல தடைகளை உடைத்தெறிந்து ரிலீஸாகியிருப்பதும் படத்தில் இடம்பெற்ற ‘ஜிஎஸ்.டி, டிஜிட்டல் இந்தியா’ தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.