வெளியுறவு அமைச்சர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் செல்வதாகவும், அங்கு ரோஹிங்கியா அகதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.
மியான்மரின் ரகினே மாகாணத்தில் ரோஹிங்கியா தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு பதிலடியாக, மியான்மர் ராணுவத்தினர் ரோஹிங்கியா பிரிவைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் மியான்மர்-வங்கதேசம் எல்லையில் அமைந்துள்ள நாஃப் நதியைக் கடந்து வங்கதேசத்துக்குள் நுழைந்து வருகின்றனர். இந்தியாவில் அகதிகளாக இருக்கும் அவர்களை வெளியேற்றுவதற்கு மத்திய அரசு முயற்சித்த போது, உச்ச நீதிமன்றத்தில், இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், அந்த முயற்சி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வங்காள தேசம் செல்கிறார். அங்கு ரோஹிங்கியா அகதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.