சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரயருமான நடராஜனுக்குப் பொறுத்தப்பட்ட புதிய உறுப்புகள் நன்றாக செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, நுரையீரல் சேதம் ஆகிய பாதிப்புகளோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் நடராஜன் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அக்டோபர் 4-ஆம் தேதி கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறியதாவது:
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் அறுவை சிகிச்சை முடிந்து இன்றுடன் 19 நாட்கள் நிறைவடைந்த நிலையில் நடராஜனுக்கு பொருத்தப்பட்டுள்ள கல்லீரல் மற்றும் சிறுநீரகம் நல்ல முறையில் இயங்குகிறது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விரைவாக குணமடைந்து வருகிறார் என்று தெரிவித்துள்ளனர்.