சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், நடிகர் விஜயை வளைத்து போட்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என கூறியுள்ளார். மேலும் அவர் கூறும் போது தவறான கருத்துகள் எந்த படத்தில் வந்தாலும் அவற்றை நீக்குவதற்கு நாங்கள் கோரிக்கை வைப்போம்.
காங்கிரஸ் ஆட்சியில் அவசர நிலை பற்றிய திரைப்படம் வந்தபொழுது முடக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. பற்றி காங்கிரஸ் கட்சி தவறான தகவல்கள் தருவதை நிறுத்த வேண்டும். நல்ல திட்டங்களை அரசு கொண்டு வரும்பொழுது எழும் விமர்சனங்களை கண்டு நாங்கள் அஞ்ச போவதில்லை என்று கூறினார்.
மேலும் கரூரில் நடைபெறும் பொது குழுவில் அரசியல் சூழல், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பற்றி ஆலோசிக்கப்படும். எச். ராஜா பற்றி நடிகர் விஷால் தனது ட்விட்டரில் தெரிவித்த தகவலை நான் பார்க்கவில்லை எனறு தெரிவித்தார்.