வரும் 25-ம் தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வரும் 25-ம் தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வரும் 25-ம் தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:  வரும் 25-ம் தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: - வரும் 25-ம் தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக போளூரில் 10 செ.மீ., சிவகங்கையில் 8 செ.மீ., பேச்சிப்பாறையில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com