தமிழிசை சவுந்தரராஜனுக்கு தொலைபேசியில் மர்மநபர்கள் கொலை மிரட்டல்!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, மொபைல் போனில் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
தமிழிசை சவுந்தரராஜனுக்கு தொலைபேசியில் மர்மநபர்கள் கொலை மிரட்டல்!

சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, மொபைல் போனில் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள லோகையா காலனியில், தமிழிசை சவுந்தரராஜன் வசித்து வருகிறார். கடந்த நான்கு நாட்களாக, அவரை மொபைல் போனில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், அவரை ஆபாசமாக பேசுவதோடு, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து, இந்த மிரட்டல் தொடர்பாக, தமிழிசை சவுந்தரராஜன் சார்பில் அவரது வழக்குரைஞர் தங்கமணி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், தமிழிசையை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர்களின் செல்போன் எண்ணும் போலீஸில் கொடுக்கப்பட்டுள்ளது.

புகாரை பெற்றுக்கொண்ட விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, புகாரில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் போன் எண்கள் அடிப்படையில், தமிழிசைக்கு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com