தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பருவ மழை கணிசமாக பெய்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது.
தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி அணை நிரம்பிவிட்டது. சாத்தனூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அதே போல் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 441 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.