அமர்நாத் யாத்ரீகளை கொன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த அபு இஸ்மாயில் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் 6 பெண்கள் உட்பட 7 பேர் பலியாகினர். இது தொடர்பாக புலனாய்வுத் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர். பல்வேறு கோணங்களில் நடத்திய ஆய்வில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் கமாண்டர் அபு இஸ்மாயில்தான், தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து காஷ்மீரில் ராணுவ வீரர்கள் ஒவ்வொரு இடமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று நல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அபு இஸ்மாயில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.