சட்டப்பேரவை தலைவர் தனபால் உடன், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆலோசனை

சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சட்டப்பேரவை தலைவர் தனபால் உடன், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆலோசனை

சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து  ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னதாக தமிழக அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணனுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை  நடத்தினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 20ம் தேதி வரை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இதையடுத்து சபாநாயகருடன் தலைமை வழக்கறிஞர் ஆலோசனை நடத்தியுள்ளார். தற்போது சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனும் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com