ஊழல் தொடர்பான மேலும் இரண்டு வழக்குகளில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நாவாஸ் ஷரிப்புக்கு பாக்கிஸ்தான் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பனாமா ஆவணங்கள் கசிவைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் அமைத்தது. அந்த விசாரணைக் குழுவின் அறிக்கை அடிப்படையில் நவாஸ் ஷெரீஃபை தகுதி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதையடுத்து அவர் தனது பிரதமர் பதவியையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்தார். இந்நிலையில், நிலுவையில் இருக்கும் இரண்டு ஊழல் வழக்குகள் தொடர்பாக நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் நேரில் ஆஜராக வேண்டும் என பாகிஸ்தான் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், மேலும் இரண்டு ஊழல் வழக்குகள் தொடர்பாக நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்களிடம் விசாரணை நடத்த வேண்டும். எனவே, நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் மரியம், உசேன், ஹாசன் மற்றும் அவரது மருமகன் மொகமது சப்தார் ஆகியோர் வரும் 19 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.