யமுனை ஆற்றில் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பட் பகுதியில் யமுனை ஆற்றில் 60 பேருடன் பயணம் செய்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
யமுனை ஆற்றில் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பட் பகுதியில் யமுனை ஆற்றில் 60 பேருடன் பயணம் செய்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 

30 பேர் பயணிக்க வேண்டிய படகில் 60 பேர் பயணம் செய்ததால் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக  இறந்தவர்களின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.  படகு விபத்தில் உயிரிழந்தவர்களிடன் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் இரங்கல் தெரிவித்தார்.

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com