இந்திய விமானப்படை ஏர்மார்ஷல் அர்ஜுன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு வயது 98. வயோதிகம் காரணமாக உடலம் பாதிக்கப்பட்டுள்ள அவரை தில்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரை நேரில் சென்று பார்த்தார்.
1965 இந்தியா-பாக்கிஸ்தான் போரில் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்திய விமானப் படையில் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரே அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவரை பார்க்க பிரதமர் நரேந்திர மோடி தில்லி ராணுவ மருத்துவமனை சென்று நேரில் நலம் விசாரித்தார். அர்ஜூன் சிங் 1938-ல் விமானப்படையில் சேர்ந்தார். ஓய்வுக்கு பிறகு 1971-ல் சுவிட்சர்லாந்து தூதராக பணியாற்றினார்.