திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேசி வருகிறார். விழாவில் பேசிய அவர் திமுக எப்போது ஆட்சிக்கு வரும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: - நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பது திமுக தான். திமுகவை அளிக்க நினைப்பவர்களுக்கு இந்த கூட்டம் சரியாக அமைந்துள்ளது. தமிழகத்தை மத்திய அரசிடம் அடமானம் வைத்துவிட்டது அதிமுக அரசு: பெரும்பான்மை இல்லாத அரசு செயல்பட ஆளுநர் எப்படி அனுமதி அளிக்கிறார்? என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும் நீதிமன்றம் மூலம் நல்ல செய்தி வரும். ஒருவேளை வராவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டும்.
நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்களை நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டது மத்திய அரசு நவோதயா பள்ளி என்ற பெயரில், தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது மத்திய அரசு. அதனை அதிமுக அரசு வேடிக்கை பார்க்கிறது.
அரை நூற்றாண்டாக ஹிந்தியை தமிழகத்திற்கு நுழைய விடவில்லை. அண்ணாவின் பெயரால் செயல்படும் அரசால் இப்போது ஹிந்தி தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. நாளை முதல் திமுகவுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் கூறினார்.