தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்திருந்தால் ஹெச்.ராஜா தேர்தலை பார்வையிட வந்திருக்கத் தேவையில்லை என தேர்தல் அதிகாரி கலாவதி தெரிவித்துள்ளார்.
தேசிய தலைமை அலுவலகத்திற்கு முறையான தகவலை அளித்தே நாங்கள் தேர்தலை நடத்தினோம் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும் சாரண, சாரணியர் இயக்கத்தில் 12 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 8 பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.