அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி வழக்கு தொடுத்த அயோத்தி சாமியார் மகந்த் பாஸ்கர் தாஸ் காலமானார். அவருக்கு வயது 89. மகந்த் பாஸ்கர் தாசுக்கு கடந்த புதன்கிழமை இரவு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது.
உடனடியாக பைசாபாத்தில் உள்ள ஹர்சன் இதய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணிக்கு மரணம் அடைந்தார்.
மகந்த் பாஸ்கர் தாஸ் உடல், உடனடியாக பைசாபாத் நகா ஹனுமதி காதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து சரயு ஆற்றங்கரையில் அவரது உடல், பிற்பகலில் தகனம் செய்யப்பட்டது.