ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு 

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு 

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் மற்றும் 4 ‛டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் போட்டியில் இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதுவதால் இந்த போட்டியை காண ரசிகர்கள் பெருத்த ஆவலுடன் உள்ளனர்.

இந்திய அணி சார்பில் விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ரஹானே, லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, டோனி (விக்கெட் கீப்பர்), அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ்யாதவ், முகமது ‌ஷமி, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஹில்டன் கார்ட்ரைட், டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் பவுல்க்னெர், நாதன் கவுல்டர் நிலே, கம்மின்ஸ், கனே ரிச்சர்ட்சன், ஆஷ்டன் அகர், ஆடம் ஜம்பா, பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களத்தில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com