பிரதமர் நரேந்திர மோடியின் 67 வது பிறந்தநாள்: சேவா தினமாக அனுசரிப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் 67 வது பிறந்தநாளை கொண்டாடும் முகமாக பாரதீய
பிரதமர் நரேந்திர மோடியின் 67 வது பிறந்தநாள்: சேவா தினமாக அனுசரிப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் 67 வது பிறந்தநாளை கொண்டாடும் முகமாக பாரதீய ஜனதா கட்சி சார்பில்  நாடெங்கிலும் சேவா தினமாக இது கொண்டாடப்படுகிறது. கட்சி தலைவர்கள், மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் நிகழ்ச்சிகளிலும் தூய்மைப் பணிகளிலும் பங்கேற்கின்றனர். 

பாஜக தலைவர் அமித் ஷா, ராஞ்சியிலும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தில்லியில் கீர்த்தி நகரிலும், ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் மும்பையிலும்  தங்கள் தலைவரின் பிறந்த நாளைக் கொண்டாடி வருவார்கள்.

நாட்டில் இது ஒரு 'சேவை நாள்' (சேவா திவாஸ்) என ஒரு கட்சி தலைவர் கூறினார். நாடு தழுவிய பல்வேறு நிகழ்ச்சிகளில்  அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com