ஐ.நா., மனித உரிமை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜெனீவா சென்றுள்ளார்.
இந்த கூட்டத்தில் இலங்கை போரின் போது நடந்த மனிதஉரிமை மீறல்கள் குறித்த முழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. 10 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் வைகோவும் கலந்து கொள்கிறார்.
இரு ஆண்டுகளுக்கு முன்பு ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.