மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 151 புள்ளிகள் உயர்ந்து 32,424 புள்ளிகளாக இருந்தன.
அதேபோல் தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 68 புள்ளிகள் உயர்ந்து 10,153 புள்ளிகளாக இருந்தன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகளவில் டாலரின் மதிப்பை விட மற்ற நாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததாலும், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் டாலரை விற்பனை அதிகரித்ததன் எதிரொலியாகவும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.64.08-ஆக வர்த்தகமானது.