ஒசூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்தது.
file photo
file photo

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்தது.

விழாவில் பேசிய முதல்வர் ஒசூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஓசூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எவ்வளவு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டாலும், தமிழக அரசை அசைக்க முடியாது. பிரச்சினைகளை எழுப்பி ஆதாயம் தேட நினைக்கும் திமுகவின் முயற்சி ஒருபோதும் பலிக்காது என்று கூறினார். 

மேலும் ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை நிறைவேற்றி சாதனை செய்து வருகிறது இந்த அரசு. அ.தி.மு.க.வில் தான் சாதாரண தொண்டன் உயர்ந்த பதவிக்கு வர முடியும் என பேசினார்.

சூளகிரி அருகே வர்த்தக ஊக்குவிப்பு மையம் அமைக்கப்படும். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இரு இடங்களில் தடுப்பணை கட்டப்படும். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்றும் அவர் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com