நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த உயர்  நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சங்க நிதியை கையாடல் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோரிடம்
நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த உயர்  நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சங்க நிதியை கையாடல் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகர் சங்க உறுப்பினர் வராகி என்பவர் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மீது நிதி மோசடி குறித்து புகார் கொடுத்திருந்தார். இந்த புகார் மனு மீது எந்த நவடிக்கையும் எடுக்கப்படாததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

புகாரி மனுவில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமத்தை தனியார் தொலைக்காட்சிக்கு அளிக்க லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது.  

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com