மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை: மு.க. ஸ்டாலின்

ஜெயலலிதாவை அப்போலோவில் யாரும் பார்க்கவில்லை என அமைச்சர் சீனிவாசன் கூறினார்.
மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை: மு.க. ஸ்டாலின்

ஜெயலலிதாவை அப்போலோவில் யாரும் பார்க்கவில்லை என அமைச்சர் சீனிவாசன் கூறினார். இது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை யாரும் சந்திக்காதபோது 3 தொகுதி இடைத்தேர்தலில் கைரேகை பெற்றது எப்படி? 

தன் கைவசம் இருந்த இலாகாக்களை பன்னீர்செல்வத்திற்கு மாற்ற ஆளுநருக்கு அறிவுரை வழங்கி ஜெயலலிதா கையெழுத்திட்டாரா?

மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை மேலும் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் குறித்து சிபிஐ விசாரணைக்கு தாமதமின்றி உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com