புதுதில்லி: மத்திய அரசு, சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் டிசம்பர் மாதம் வரை மாற்றமில்லை என அறிவித்துள்ளது.
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதம் 0.1 சதவீதம் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், பொது சேம நல நிதி, கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ருதி உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி அக்டோபர் முதல் டிசம்பர் வரை இப்போதுள்ள அளவே நீடிக்கும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதாவது பிபிஎஃப் திட்டங்களுக்கான 7.8 சதவீதமும், 115 மாத முதிர்வுகாலத்தைக் கொண்ட கிஸான் விகாஸ் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமும், பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் 8.3 சதவீதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.