தில்லியில் சந்திரபாபு நாயுடுவுடன் அரவிந்த் கேஜரிவால் சந்திப்பு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆந்திர பவனில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 
தில்லியில் சந்திரபாபு நாயுடுவுடன் அரவிந்த் கேஜரிவால் சந்திப்பு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆந்திர பவனில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி அண்மையில் விலகியது.  மேலும், மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவும் அக்கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. 

இந்நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு முதல் முறையாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று செவ்வாய்கிழமை தில்லி சென்றுள்ளார். மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். 

மத்திய பாஜக அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அநீதி இழைத்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சியுடன் பிராந்திய கட்சிகள் கைகோக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை சந்திரபாபு நாயுடு ஓருங்கிணைக்கும் விதமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை ஆந்திர பவன் இல்லத்தில் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com