ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் ஜித்துராய்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா தொடர்ந்து பதக்கங்களை வென்று குவித்து வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் 235.1 புள்ளிகள் பெற்று இந்தியாவின் ஜித்துராய் தங்கம் வென்றார். இந்த புள்ளிகள் காமன்வெல்த் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட புதிய சாதனை என்ற பதவை பதிவு செய்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டுகளின் இந்தியாவின் 15- வது பதக்கத்தை வென்றுள்ளார் ஜித்துராய்.
இதேபோல் மற்றொரு இந்திய வீரரான ஓம் மிதர்வால் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.