டோக்கியோ: ஜப்பானின் மேற்கு பகுதியில் சுமார் 5.8 ரிக்டர் அளவுகோலில் இன்று திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹோஸ்னுவில் உள்ள ஷிமானே பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கடியில் சுமார் 10 கிலோமீட்டர் (7.5 மைல்கள்). ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கதத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருள்சேதம் குறித்து உடனடியாகத் தகவல் இல்லை.