சாண்டியாகோ: சிலி நாட்டின் மத்தியப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 2 ஆக பதிவானது.
இது குறித்து அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிலி நாட்டின் தென்மேற்கே ஓவாலே என்ற பகுதியில் கடலுக்கு அடியில் 76 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக சான்டியாகோ நகரில் கட்டங்கள் குலுங்கின. துறைமுக நகரமான கோகுயிம்போ பாதிக்கப்பட்டது .
எனினும் உயிர் சேதம் குறித்த தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சான்டியாகோ நகரில் கட்டங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக வெளியேறி தஞ்சமடைந்தனர்.