உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை செருப்பால் அடியுங்கள் என்று கூறியது கர்நாடக காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும் பலப்பரீட்சை நடத்தும் இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முடிவுகள் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன.
இதையடுத்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே கருத்து மோதல் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு தலைவர் தினேஷ் குண்டு ராவ், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை செருப்பால் அடியுங்கள் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆதித்யநாத் இந்திய அரசியலுக்கு ஒரு அவமாரியாதை என்றும், அவர் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக இருக்க தகுதியற்றவராக இருக்கிறார், அவருக்கு எந்தவொரு தகுதியும் இருந்திருந்தால் அவர் இப்போது பதவி விலகியிருப்பார் என்று கூறினார்.