ஜார்சூகுடா: ஒடிசா மாநிலம் ஜார்சூகுடாவில் தெலித்தி கிராமத்திற்கு அருகே ரயில் தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்த யானைகள் மீது சரக்கு ரயில் மோதியதில் 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.