கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது
பெங்களூரு: மே 12-ஆம் தேதி கர்நாடகா சட்டபேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. வருகிற 24 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று செவ்வாய்க் கிழமை (ஏப் 17) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இன்று தொடங்கும் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி வருகிற 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகும். தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 25-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 27-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால் தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.