வடகொரியா வீரர்களை குறைக்கூறும் செய்திகள், இசை, மற்றும் பிரச்சார தகவல்களை எல்லையில் உள்ள மிகப்பெரிய ஒலிப்பெருக்கிகள் மூலம் தென்கொரியா ஒலிபரப்பி வந்தது. வடகொரியாவும் அதேபாணியில் தென்கொரியாவுக்கு பதிலடி கொடுக்கும். இது இரு நாட்டு ராணுவத்தினர் இடையே வழக்கமாக நடந்து வருகிறது.
தற்போது இரு கொரிய நாடுகள் இடையே சமாதான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் வரும் ஏப்ரல் 27ம் தேதி இரு கொரிய அதிபர்களும் முதல்முறையாக நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
அதை தொடர்ந்து நல்லிணக்க நடவடிக்கையாக தென்கொரியாவில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிகளின் செயல்பாடு இன்று நிறுத்தப்பட்டது. எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே உள்ள பதற்றத்தை போக்கி அமைதியான சூழ்நிலையை உருவாக்க அந்த ஒலிப்பெருக்கிகள் அணைக்கப்பட்டன என்று தென்கொரியா பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டது.