ஏமனில் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த இடத்தின் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 20 பேர் பலியாகி உள்ளனர். 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 30 பேர் குழந்தைகளாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்களின் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை.