பெங்ஜிங்: சீனாவில் இசை நிகழ்ச்சியுடன் கூடிய நைட் கிளப் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் உள்ள நைட் கிளப் ஒன்று உள்ளது. அங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து சம்பவத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தந்துள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சீன அரசின் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் தீ விபத்துக்கான காரணம் மற்றும் விபத்தின் சேதங்கள் குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகில்லை.