குஷிநகர்: உத்திரபிரதேசத்தில் பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பள்ளி குழந்தைகள் உயிரிழந்தனர்.
ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்கும் போது ரயில் மீது பள்ளி பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.