புதுதில்லி: கோவையில் இருந்து செயல்படும் தனியார் ஏஜென்சி அளித்த போலி சான்றிதழ்களால் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற 22 இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் எம்பிஏ படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்காகவும் சென்ற தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த 22 பேரின் விசாவை அந்நாட்டு அரசு செய்துள்ளதால் தமிழகம், கேரளாவை சேர்ந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தவித்து வருகின்றனர்.
அவர்களுக்கு கோவை தனியார் ஏஜென்சி போலி தேசிய அங்கீகார வாரிய சான்றிதழ்களை வழங்கி அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாங்கள் அசல் சான்றிதழ்களை கொடுத்த நிலையில் போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த 22 பேரும் அளித்த சான்றிதழ்கள் போலியானது என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய நிர்வாகம் இந்திய மாணவர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. இதனால் மாணவர்கள் ஆஸிதிரேலியாவில் தவித்து வருகின்றனர்.