புது தில்லி: நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 50 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செப்டம்பா் 25-ஆம் தேதி தொடங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி சுதந்திர உரையின்போது அறிவித்தாா்.
பாரதிய ஜனசங்கத்தை உருவாக்கிய தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த தினம் செப்டம்பா் 25-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் தொடங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட இருக்கிறது.