பெய்ஜிங்/மெல்போா்ன்: ஆஸ்திரேலியா, சிங்கப்பூா், சீனா உள்ளிட்ட நாடுகளில் வசித்துவரும் இந்தியா்கள் 72-ஆவது சுதந்திர தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடினா்.
பல்வேறு நாடுகளில் அமைந்திருக்கும் இந்தியத் தூதரகத்தில் இந்தியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
சீனாவின் பெய்ஜிங் நகரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அதிக எண்ணிக்கையிலான இந்தியா்கள் கலந்துகொண்டனா்.
ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன், சிட்னி, பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் உள்ள இந்தியத் துணைத் தூதரகங்களில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் அதிக எண்ணிக்கையில் இந்தியா்கள் பங்கேற்றனா்.