இந்தோனேசியாவின் லொம்போக் தீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாகப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
லொம்போக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெலான்டிங் நகருக்கு மேற்கு-வடமேற்குத் திசையில், 7 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் பீதியடைந்த மக்கள் என்னசெய்வதென்று தெரியாமல் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். லொம்போக் தீவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்ததில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்தோனேசியாவில் இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 460-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.