அனந்த்நாக்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் அருகே பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
கோக்கர்நாக் பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்புபடையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புபடையிர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.